தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,232 people in Tamil Nadu today
10/12/2020
தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( வியாழக்கிழமை) மட்டும் 1,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோானாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
தற்போது தமிழகத்தில் 10,491 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1,315 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளார். இவர்களையும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை
11, 836 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிகை மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் – 5
செங்கல்பட்டு – 78
சென்னை – 347
கோவை – 133
கடலூர் – 9
தர்மபுரி – 8
திண்டுக்கல் – 25
ஈரோடு – 37
கள்ளக்குறிச்சி – 1
காஞ்சிபுரம் – 48
கன்னியாகுமரி – 22
கரூர் – 15
கிருஷ்ணகிரி – 14
மதுரை – 37
நாகை – 21
நாமக்கல் – 27
நீலகிரி – 14
பெரம்பலூர் – 1
புதுக்கோட்டை – 9
ராமநாதபுரம் – 2
ராணிப்பேட்டை – 12
சேலம் – 72
சிவகங்கை – 6
தென்காசி – 2
தஞ்சாவூர் – 21
தேனி – 12
திருப்பத்தூர் – 8
திருவள்ளூர் – 50
திருவண்ணாமலை – 26
திருவாரூர் – 18
தூத்துக்குடி – 14
திருநெல்வேலி – 15
திருப்பூர் – 48
திருச்சி – 17
வேலூர் – 32
விழுப்புரம் – 10
விருதுநகர் – 12
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 0
உள்நாடு – 4
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0
மொத்தம் – 1,232