தமிழகத்தில் இன்று 1,195 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,195 people in Tamil Nadu today
13/12/2020
தமிழகத்தில் இன்று 1,195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 1300க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,195 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,276 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 76 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 10,115 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியா முழுவதும்
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,57,029 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதாவ நேற்று ( சனிக்கிழமை) 30,254 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 391 பேர் கொரேனாவுக்கு இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) மட்டும் 33,136 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து புதுவையில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,492ஆக உயர்ந்துள்ளது.