பாாப்பாக்குடி கோவில் விழாவில் வாலிபர் வெட்டிக்கொலை
1 min read
Youth murdered at Paapakkudi temple ceremony
15/12/2020
பாப்பாக்குடியில் நடந்த கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஊர் தலைவர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கோவில் விழா
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடியை அடுத்த ரங்கசமுத்திரம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் பாடாலிங்கம். இவருடைய மகன் இசக்கிராஜா (வயது 24). கூலி தொழிலாளி. அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவில் கார்த்திகை மாத சூறை விடும் திருவிழா நடைபெற்றது.
அப்போது இசக்கிராஜா, அவருடைய நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் (25) மற்றும் 17 வயதான வாலிபர் ஆகிய 3 பேரும் மது போதையில் கோவிலுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதனை ஊர் தலைவரான பாபநாசம் (65) கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று பாபநாசத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், அவருடைய மகன் ஜெயகணேசன் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிராஜாவை தடுக்க முயன்றனர். இதில் ஜெயகணேசனின் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. எனினும் மாரியப்பன், ஜெயகணேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிராஜாவிடம் இருந்த அரிவாளை பறித்தனர். பின்னர் அதே அரிவாளால் இசக்கிராஜாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
பலத்த வெட்டுக்காயம் அடைந்த இசக்கிராஜா, பாபநாசம் ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அரிவாள் வெட்டுப்பட்ட ஊர் தலைவர் உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததுமு் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இசக்கிராஜா, பாபநாசம், ஜெயகணேசன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இசக்கிராஜா நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். பாபநாசம், ஜெயகணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவபத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இன்னொரு கொலை
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெரு பத்ரகாளியம்மன் கோவில் அருகே அடுத்தடுத்த வீடுகளில் அண்ணன் தம்பிகளான முத்துசாமி மற்றும் முத்துக்குட்டி வசித்து வருகின்றனர் இவர்கள் கூலி வேலை செய்துவருகிறார்கள்.
முத்துக்குட்டியின் மகன் மணிகண்டபிரபு வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு பெரியம்மா வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் பெரியம்மா சுந்தரியிடம் குடித்துவிட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றவே மணிகண்ட பிரபு கையில் வைத்திருந்த கத்தியால் சுந்தரியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார்.இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுந்தரி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தப்பியோடிய மணிகண்டபிரபு அருகில் இருந்த சாலை ஓரம் பரபரப்பாக ரத்தக் கறையுடன் ஓடிய நிலையில் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.