தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,181 people in Tamil Nadu today
16/12/2020
தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 1200க்கு குறைவாகே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) 1,181 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்ந்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 2 ஆயிரத்து 342 ஆக உள்ளது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,240 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 531 ஆக உயர்வடைந்து உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,931 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது தமிழக்தில் 9,880 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று மேலும் 344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,903 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும்
இந்திய அளவிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்திய அளவில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 26 ஆயிரத்து 382 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 99 லட்சத்து 32 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 813 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்கள். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94,56,449 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவுக்கான சிகிச்சை பலன் அளிக்காமல் 387 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 96 ஆக அதிகரித்து உள்ளது.
நாட்டில் தற்போது 3 லட்சத்து 32 ஆயிரத்து 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .