இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,010 ஆக குறைந்தது
1 min read
Corona exposure in India has dropped to 24,010
17/12/2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,010 ஆக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா மிக அதிகமாக இருந்தது. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தாலும் கொரோனா குறைந்தபாடு இல்லை. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி என வரிசைக்கட்டி கொரோனா பரவியது. அதன்பின் கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களும் கொரோவால் பரவல் போட்டியில் பங்கேற்று மக்களை பீதி அடையச் செய்தது.
இந்த நிலையில் தற்போது இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. தினமும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின்படிப்படியாக குறையத்தொடங்கியது. கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 30 ஆயிரம் பேர் என்ற நிலையில் பாதிப்பு இருந்தது.
24,010 பேர்
தற்போது மேலும் குறைந்துள்ளது. இன்று( வியாழக்கிழமை) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் (அதாவது நேற்று ) நாடு முழுவதும் 24,010 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டது கண்டறியப்பட்டது. ( நேற்று 11,58,960 கொரேனாா பரிசோதனைகள் நடந்தன.) இந்தியாவில் இதுவரை மொத்தம் 99 லட்சத்து 56 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் நேற்று(புதன்கிழமை) மட்டும் 355 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவின் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 33,291 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 94 லட்சத்து 89 ஆயிரத்து 740 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 366 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.