தமிழகத்தில் இன்று 1,174 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,174 people in Tamil Nadu today
17/12/2020
தமிழகத்தில் இன்று 1,174 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இன்று 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 1,174 பேருக்கு கொரோனா கண்டறியபட்டுள்ளது. தமிகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து,516 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,214 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். சென்னையில் 4 பேர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை, தென்காசி
திருநெல்லை மாவட்டத்தில் 10 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பேருக்கும் இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.