June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

1,410 கிலோ எடை செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

1 min read

The PSLV C-50 rocket was successfully launched with a satellite weighing 1,410 kg

17/12/2020

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு 1,410 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

செயற்கை கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ( இஸ்ரோ) சார்பில் செயற்கை கோள்களுடன் ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து இருந்தது. அதை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது.

ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று( புதன்கிழமை) பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வெற்றிகரமாக ஏவப்பட்டது

25 மணிநேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று(வியாழக்கிழமை) மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் நான்காவது கட்டத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.