திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மனைவியை பாரதீய ஜதனா எம்.பி. விவகாரத்து
1 min read
Bharatiya Janata Party MP has accused his wife of joining the Trinamool Congress. Affair
21/12/2020
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மனைவி இணைந்ததால் அவர் மீது ஆத்திரம் அடைந்த அவரது கணவரான பாரதீய ஜனதா எம்.பி., மனைவியை விவகாரத்து செய்யப்போவதாக கூறியுள்ளார்.
கட்சி மாறுதல்
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அந்த மாநில அரசியலில் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.
அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்பட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 35 பேர் பாரதீய ஜனதாவுக்கு கட்சிமாறினார்கள்.
இதனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா எம்.பி. ஒருவரின் மனைவி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த எம்.பி. தன்னுடைய மனைவியை விவகாரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
அந்த பாரதீய ஜனதா எம்.பி.யின் பெயர் சவுத்ரா கான். இவரது மனைவி பெயர் சுஜாதா மோண்டல் கான். இதுபற்றி சவுத்ரா கான் கூறும்போது, திருமண பந்தத்தை அரசியல் முடித்து விட்டதாக கூறினார்.
அங்கீகாரம் இல்லை
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, பிஸ்னாபூர் தொகுதிக்குள் நுழைய சவுமித்ரா கானுக்கு இடைக்கால தடையை கோர்ட்டு விதித்து இருந்தது. அப்போது, தனிநபராக பிரசாரத்தில் ஈடுபட்டு கணவர் வெற்றிக்கு கடும் பாடு பட்டவர் சுஜாதா. தனது கணவர் வெற்றிக்கு கடும் பாடு பட்ட போதிலும் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று சுஜாதா குற்றம் சாட்டினார்.
சவுத்ரா கான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, “அரசியலால் 10 ஆண்டு கால எங்கள் திருமண பந்தம் முறிந்துவிட்டது. பாஜகவுக்காக நான் கடுமையாக உழைப்பேன். நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவது இல்லை” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
கணவர் உணர்வார்
சுஜாதா கான் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவர், “அரசியல் வேறு குடும்பம் வேறு. அவர் (கணவர்) என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை செய்யட்டும். ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக உணர்வார் எனக்கு நம்பிக்கை உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கூட அவர் வரலாம்” என்றார்.