June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சனி பெயர்ச்சி பலன்கள் -மிதுனம்

1 min read

Sani perchi palangal kaliyur naranyanan

25-12-2020
கல்வியை தரக்கூடிய புதன் உங்கள் ராசி நாயகன். எனவே பெரும்பாலும் நீங்கள் சிறந்த கல்விமானாக இருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் அதிகமாக படிக்காதவர்களாக இருந்தாலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குவீர்கள். உங்களை கீழ் நிலையில் உள்ளவர்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். எதையும் சாமர்த்தியமாக செய்து முடித்துவிடுவீர்கள். எனவே உங்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் என்ற நற்பெயர் எடுப்பீர்கள். நீங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் இணைந்து எதை செய்தாலும் அது சிறப்பாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவினை உங்கள் குடும்பத்தில் ஆலோசனை செய்தபின் எடுங்கள். ஒருகை தட்டினால் ஓசை இல்லை. இரண்டு கை தட்டவேண்டும். இதை உங்கள் குடும்ப விசயத்தில் கையாளுங்கள். நீங்கள் பிறந்த ஜாதகத்தில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவதோடு உயர்பதவியையும் பெற்றிருப்பீர்கள். புதனோடு செவ்வாய் சாதகமாக இருந்திருந்தால் நீங்கள் கைதேர்ந்த மருத்துவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருப்பீர்கள். குரு சிறப்பாக இருந்திருந்தால் உங்கள் அறிவோடு ஞானமும் பெற்றிருப்பீர்கள். எத்துறையிலும் வல்லவராக இருப்பீர்கள்.
இப்படி வல்லவராக இருக்கும் உங்கள் ராசிக்கு சனிபகவான் ஏழாம் இடத்தில் இருந்தார். இது சாதாரண இடம் என்றாலும் பாதகங்கள் எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. சிற்சில பிரச்சினைகளை உருவாக்கி இருக்கலாம். ஆனால் அதை உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு முறியடித்து இருப்பீர்கள். அதிக அலைச்சலையும், பளுவையும் தந்திருப்பார். தோள்தாங்க உறவு இருந்தமையால் அந்த பளுவும் சுமையாக தெரிந்து இருக்காது. எல்லா செயலையும் தீவிரமாக உழைத்து அதில் வெற்றி கண்டிருப்பீர்கள்.
இந்த நிலையில்தான் தற்போது சனிபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். எட்டாமிடம் என்பது அஷ்டமம். இந்த இடத்தில் இந்த கிரகம் வந்தால் நன்மை செய்ய மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் உறவினர்கள் மத்தியில் பிணக்குகள் வரலாம். அலைச்சலும், பளுவும் அதிகரிக்கலாம். சிலர் தொழில் விசயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இதற்காக குடும்பத்தோடு வேறு ஊரில் குடிபெயரும் நிலைகூட உருவாகலாம். இது பொதுவான பலன்கள்தான். இதை உங்கள் குடும்பத்தாரின் உறுதுணையோடு எளிதில் முறியடிப்பீர்கள். ஆனால் எந்த வேலையையும் சுலபமாக செய்து முடித்துவிடலாம் என்று எண்ண வேண்டும். முதல்தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதேநேரம் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதை கொண்டு சிறப்பாக நடத்த முயற்சி செய்யுங்கள். புதிய தொழில் தொடங்க இந்த காலத்தில் எண்ண வேண்டாம்.
சனிபகவான் அஷ்டமத்தில் இருக்கும்போது தனது பார்வைகளாலும் நன்மை தரமாட்டார். அதற்காக கவலை கொள்ள வேண்டாம் கோச்சார பலனை பார்க்கும்போது மற்ற முக்கிய கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் குருபகவான் இரு முறையும் ராகு-கேது ஒரு முறையும் இடம் பெயருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.