June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சனி பெயர்ச்சி பலன்கள்- விருச்சிகம்

1 min read

Saniperchi palngal- Viruchigam- Kaliyur Narayanan

25-12-2020
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் வீரதீரத்துடன் செயல்படும் வல்லமை பெற்று விளங்குவீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்திருந்தால் நீங்கள் பாதுகாப்பு துறையில் பணியில் சேருவீர்கள். சிலர் உயர் அதிகாரியாகவும் வாய்ப்பு உண்டு. செவ்வாயோடு உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான புதனும் சாதகமாக அமைந்திருந்தால் மருத்துவத்தில் குறிப்பாக அறுவை சிகிச்சையில் நிபுணராக சிறந்து விளங்குவீர்கள். பொதுவாக விருச்சிக ராசியினர் எதையும் மறக்காமல் திறந்த மனதுடன் வாழ்பவர்கள். வைராக்கியம் கொண்டவராக இருப்பர். தனது வாழ்க்கையில் நடந்த நல்லதோ கெட்டதோ எதையும் பிற்காலத்தில் மறந்து விடமாட்டீர்கள். உங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க தயங்குவீர்கள். அதனால் உங்களை சிலர் அவர்கள் செய்த தவறை நினைவில் கொள்ளாமல் வஞ்சகன் என்றுகூட பழிப்பார்கள். இந்த ராசியினர் பெரும்பாலும் அறிவாளியாக விளங்குவார்கள். அதேபோல் பணவசதி படைத்தவராகவும் இருப்பர். பிறரிடம் இனிமையாக பேசுபவர்கள். மனைவியிடம் அதிக பிரியமாக நடந்து கொள்வார்கள். அதேபோல் இந்த ராசி பெண்கள் தங்கள் கணவரிடம் அன்பான இருப்பர்.
இப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து இருப்பீர்கள். ஏழரை சனி காலம் உங்களை ஆட்டிப்படைத்திருக்கும். தொழிலில் பிரச்சினை, பிற்போக்கான சூழ்நிலை வந்து கொண்டே இருந்திருக்கும். உங்களின் முயற்சிகள் பல கைகூடாமல் இருந்திருக்கும். இதனால் பொருளாதார இழப்பையும் சந்தித்து இருப்பீர்கள். குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருந்திருக்கும். ஒன்றிலிருந்து விடுபட்டால் இன்னொன்று துரத்துவதாக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூட தள்ளிபோய் இருக்கலாம். பலருக்கு வரவுக்கு மீறிய செலவு வந்திருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகாலம் உங்களின் கடுமையான முயற்சிக்கு தகுந்த கூலிகூட கிடைக்காமல் இருந்திருக்கும். அதேநேரம் மற்ற கிரகங்களின் பலத்தாலும், அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமையாலும் அவ்வப்போது நன்மைகளும் நடந்திருக்கும்.
இந்த நிலையில் இப்போது சனிபகவான் உங்கள் ராசியின் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடமான மகரத்திற்கு செல்கிறார். இது மிக சிறப்பான இடமாகும். இத்தோடு ஏழரை சனி காலம் முடிவுறுகிறது. இனி உங்கள் வாழ்வில் வசந்த காலம்தான். எண்ணியது அனைத்தும் இனிதே நிறைவேறும். வரவுகள் எல்லாம் நல்லபடியாக வந்த கொண்டே இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். வியாபாரம் உள்பட எல்லா தொழில்களிலும் பின்தங்கிய நிலை மாறி சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் நல்ல அனுகூலங்கள் ஏற்படம். தடைப்பட்ட திருமணம் கைகூடும். சிலர் கட்டத்தொடங்கிய வீடு மற்றும் கட்டிடங்கள் பாதியில் நின்றதை துரிதப்படுத்தப்பட்டு விரைவாக முடிக்கலாம்.
தான் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணற்ற நன்மைகளை தரும் சனிபகவானால் தன் பார்வைகளால் நன்மை தரமாட்டார். கோச்சார அடிப்படையில் பலன்களை கணிக்கும்போது முக்கிய கிரகங்களான குரு, ராகு-கேது ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் குருபகவான் இரு முறையும் ராகு&கேது ஒரு முறையும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.