June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

2021 புத்தாண்டு பலன்கள்/ தனுசு

1 min read
 2021 New year palangal /Dhanush /Kaliyur Narayanan

தனுசு ராசி அன்பர்களே! குரு பகவானை தனுசுஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் பெரியோர்களிடமும், ஆன்றோர்களிடமும் நன்மதிப்பை வைத்து இருப்பீர்கள். உங்கள் ஆட்சி நாயகன் குரு சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மேலும் உங்கள் நட்பு கிரகமான ராகு சாதகமான நிலையில் இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு சீரும், சிறப்புமாக இருக்கும்.
குரு பகவான் 2-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம் . பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். பிறகு அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் இந்த காலக்- கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணவரவு இருக்- கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவி -கரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார். மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.மேலும் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது.
ராகு 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம்.அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்து -க்கு வழிவகுப்பார்.காரிய அனுகூலத்தை கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத் -தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.
கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். உடல் உபாதைகள் வரலாம். அதற்காக கவலை கொள்ளவேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
மேற்கண்ட கிரகநிலையில் இருந்து விரிவான பலன்களை காணலாம்.
குரு,ராகு பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள். எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். மேலும் சனியின் பார்வை பலம் பொருளாதார வளத்தை அதிகரிக் -கும். எடுத்த காரியம் கைகூடும். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிட்டும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். உறவினர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கும். அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். இந்த காலகட்டத்தில் குருவின் பார்வையால் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர்.
உத்தியோகத்தில் சீரான நிலை இருக்கும். குருவால் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்- சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற் கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். சிலருக்கு பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. 4-4-2021 முதல் 14-9-2021 வரை அலைச்சல் அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதேநேரம் அனாவசிய செலவை தவிர்க்கவும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.
வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். குருவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.வியாபாரத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கூட்டாளி- கள் இடையே ஒற்றுமை மேம்படும். கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திர தொடர்பான தொழில் போன்றவை நல்ல வளர்ச்சி அடையும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பொருள் விரையம் ஏற்படும். வெளியூர் வாசம் நிகழும்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு புதிய வியாபாரம் தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். வாடிக்கையாளர் களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். சமூகத்தில் ஒரு அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கஅதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் முன்னேற்றமான பலனை காண- லாம்.பாசிபயறு,நெல்,உளுந்து, துவரை, கொண்டைக் கடலை, மஞ்சள், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.ஆடுகள்,கோழி,பசு,கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்குவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின்அன்புஅதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள்.வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பா இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சுப நிகழ்ச்சி -களில் கலந்துகொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும்.
உடல்நலம் கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.
பரிகாரம்: சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள் பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.