2021 புத்தாண்டு பலன்கள் விருச்சிகம்
1 min read
2021 New year palangal /Viruchigam /Kaliyur Narayanan
விருச்சிக ராசி அன்பர்களே! பரபரப்பும், சுறுசுறுப்பும் உங்கள் உடன்பிறப்பு. சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார். அவரின் நற்கருணை -யோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் அவர் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். அவர் உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும்.
குருபகவான் 3-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் -தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வை எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இதுவும் சுமாரான இடம். பிறகு 13-11-2021 அன்று முழு பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. குரு மன உளச்சலையும்,உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.
ராகு 7-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. இடப்பெயர்ச்சியையும், தீயோர் சேர்க்கையால் அவப் பெயரையும் சந்திக்க நேரலாம்.
கேது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உடல் உபாதையையும் தரலாம். பிரதிபலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
முக்கிய கிரக நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
குரு,ராகு சாதகமாக இல்லை என்பதனால் சிற்சில தடைகள் வரலாம் அதை சனிபகவானால் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.அவரால் அனுகூலம் ஏற்படும். பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிளால் பொருள் சேரும். வீடு-மனை வாங்கலாம். திருட்டு பயம் மறையும். 4-4-2021முதல் 14-9-2021 வரை உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது. மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிக பளுவை சுமக்கவேண்டியது இருக்கும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடை -யில்லை. மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு உங்கள் பொறுப்பு -களை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
சனிபகவானால் தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தைத்தரும்.லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர்வாசம் நிகழும். ராகுவால் இடப்பெயர்ச்-சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேர சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினை களை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.
தரகு,கமிஷன் தொழில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.
வக்கீல்களுக்கு வழக்குகள் சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெறவேண்டியதிருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். இருப்பினும் குருவின் பார்வை- யால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரைஅதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும். விரும்பிய பாடம் கிடைக்க தீவிரமுயற்சி எடுக்க வேண்டிய திருக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம்,எள் மற்றும் பனை பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். ஆடுகள், கோழி, பசுகள், கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.
பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். குருவின் 5,9-ம் இடத்துபார்வையால் பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். குருவின் பார்வையால் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பெண்காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர் தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடும் ஏற்படும்.
உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நாயனாரை வணங்கவும். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.