தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 910 people in Tamil Nadu today
2.1.2021
தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனாவில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோன நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியட்டது. அதன் விவரம் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 910 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,19,845 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 582 பேர் ஆண்கள், 328 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,95,510. பெண்களின் மொத்த எண்ணிக்கை 3,24,301. மூன்றாம் பாலினத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும்.
தமிழகத்தில் இன்று மட்டும் 238 ஆய்வகங்களில் 62,401 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
11 பேர் சாவு
கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 1,007 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 427 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 11 பேர் இறந்தனர். இதில் 6 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 5 பேர் தனியார் மஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இறந்தவர்களில் சென்னையில் 4 பேர், நாகப்பட்டினத்தில் 3 பேர், திருப்பூரில் 2 பேர், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர்.
இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,146 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,272 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்றவருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.