June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Cricket player Ganguly chest pain; Admission to the hospital

2/1/2021
பி.சி.சி.ஐ. கிரிக்கெட் தலைவர் கங்குலிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (வயது 48). கடந்த 2003&ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி., உலக கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இவர் 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

கடந்த 2019&ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், கொல்கத்தா வீட்டில் உள்ள ‘ஜிம்மில்’ பயிற்சி செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக கோல்கட்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆன்ஜியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

கங்குலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் , மேற்கு வங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கார், முதல்&மந்திரி மம்தாபானர்ஜி உள்பட பலர் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். டுவிட்டரிலும், கங்குலி விரைவில் குணமாக வேண்டி கருத்துகளை பதிவிட்டதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.