குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி; விவசாயிகள் அறிவிப்பு
1 min read
Rally in Delhi on Republic Day; Farmers notice
2.1.2021
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்துவோம் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்பட சில வட மாநிலங்களில் விவசாய சங்கத்தின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டது.
ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4&ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பேரணி
இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம் என்றும், ஜனவரி 6&ந் தேதி முதல் 20&ந் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.
இதுதொடர்பாக கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் கூறும்போது, “ ஜனவரி 23&ந் தேதி பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதுதவிர குடியரசு தினமான ஜனவரி 26-&ந் தேதி தலைநகரான டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்” என்றார்.