இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 90 ஆக உயர்வு
1 min read
Transformed corona exposure in India rises to 90
9.1.2021
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய ஊருமாறிய கொரோனா மீண்டும் உலகை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள், அல்லது அங்கிருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இதில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் நேற்று( வெள்ளிக்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் 82 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
90 ஆக உயர்வு
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று( சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.