June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கிடந்த கால்வாயை மூடிய அக்காள்-தம்பிக்கு பரிசு

1 min read

Gift to Akkall-Thampi who closed the lying canal

12.1.2021

கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி எச்சரிக்கை பலகை வைத்து அக்கா&தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

அக்காள்-தம்பி

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மனைவி – கிருஷ்ணவேணி. இவர்களது மகள் தேவயாணி (வயது 11), மகன் விக்னேஷ் (8).

கடந்த 8&-ந்தேதி அக்காள்&தம்பியான கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை பார்த்தனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்று நினைத்த தேவயானி அங்கிருந்த விளம்பர பிளக்ஸ் கட்ட பயன்படுத்தும் ‘ஆங்கிளை’ எடுத்து கால்வாய் மீது வைத்தாள். அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினாள்.

அக்காளின் இந்த செயலுக்கு தம்பியும் உதவி செய்தான். அக்காள் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தான். அவர்கள் இருவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொண்டதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். சிலர் அந்தக் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பரிசு

இந்த வீடியோ வைரலாக பரவியதால் அக்காள் தம்பியான தேவயாணி, விக்னேசை அனைவரும் பாராட்டினர். முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோர் அசோக்குமார் – கிருஷ்ணவேணி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் தேவயாணி, விக்னேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.