தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 673 people in Tamil Nadu today
13.1.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி மாநில சுகாதரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று ( புதன் கிழமை) 673 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,28,287 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுகு 6 பேர் இறந்துள்ளனர். அதில், 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்க இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 821 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையம் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 8,09,392 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 192 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.