June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் வியாபாரிளை சுட்டுக் கொன்ற 2 சிறுவர்கள் கைது

1 min read

2 boys arrested for shooting trader in Delhi

14.1.2021

டெல்லியில் முன்விரோதம் காரணமாக வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியாபாரி சுட்டுக் கொலை

டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் ரெய்ஸ் அசன்சாரி. வியா£பாரியான கடை வைத்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த படத்தை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு சிறுவர்கள் முகமூடி அணிந்தபடி ஸ்கேட்டிங் செய்தபடி வந்துள்ளனர். அவர்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியது கேமராவில் பதிவாகி இருந்தது-.
அதன்பின் அந்த வியாபாரியுடன் யார் எல்லாம் பகைவர்களாக இருந்துள்ளனர் என்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சிறுவர்கள், சனிக்கிழமை இரவு அன்சாரி தனது ஸ்கூட்டரை துடைத்து கொண்டு இருந்த போது சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.