சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி
1 min read
Magara Jothi at Sabarimala Ponnambala
14.1.2021
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார்.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுக்கு பிறகு, கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டது.
சபரிமலையில் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. மகரஜோதியை ஒட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி வந்தது. மன்னர் குடும்பத்தினரிடமிருந்து ஆபரணப் பெட்டியை தேசவம் போர்டு அதிகாரிகள் பெற்று தந்திரி, மேல்சாந்தியிடம் வழங்கினார்கள். அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு தீபாரதனை காட்டப்பட்டது.
மகர ஜோதி
இன்று மாலை 6.40 மணிக்கு சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி அய்யப்பன் காட்சி அளித்தார். பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். பொன்னம்பல மேட்டில் 3 முறை, அய்யப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது ஐதீகம். வழக்கமாக ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.