இந்தியாவில் ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 15,144 people in a single day in India
17.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதவாது நேற்று ( சனிக்கிழமை) மட்டும் 15,144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோ£னாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,57,985 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 181 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,52,274 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,170 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,96,885 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு 2,08,826 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்து 868 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 7,79,377 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.