கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணி நேரத்தில் சுகாதார பணியாளர் சாவு
1 min read
Health worker dies 18 hours after being vaccinated against corona
21.1.2021
தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இறந்தார்.
தடுப்பூசி
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று( புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் 5.30 மணி அளவில் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி மாநில பொது சுகாதார இயக்குனர் ஜி.சீனிவாசராவ் கூறுகையில், “அவர் உயிரிழந்ததற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது ஆரம்ப கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது” என்று கூறினார். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகு இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் நேற்று மாலை 6 மணிவரையில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.