தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 586 people in Tamil Nadu today
23.1.2021
தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா குறைவு சற்று ஸ்தம்பித்து உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன்விவரத்தை காணலாம்.
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 673 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தாக்கியவர்களில் இன்று ஒரே நாளில் 2 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கேரளாவில் இன்று(சனிக்கிழமை) 6,960 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரத்து 242 ஆக உயர்ந்துள்ளது.
அந்த மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 72 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 23 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.