தமிழகத்தில் இருந்து ஜெருசலேத்துக்கு 1000 பேர் செல்ல அனுமதி
1 min read
1000 people allowed to go to Jerusalem from Tamil Nadu
15.2.2021
தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜெருசலேம்
கோவையில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:&
ஒவ்வொருவருக்கம் அவரவர்கள் மதம் பெரியது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம்.
தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இதுவரை 600 பேர் தான் செல்லலாம் என்று இருந்தது. இனி 1,000 பேராக உயர்த்தப்படும்.
தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது. சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.