வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
1 min read
E-pass is mandatory for those coming from overseas
7.3.2021
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள்அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் தேவை என்று – தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா
சீனாவில் உருவான கொரேபபனா உலகம் முழுவதும் பரவி எண்ணற்றோரை கொன்று குவித்துள்ளது. இதற்கு எதிராக கடுமையாக போராடி அதன் பரவலை குறைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், மராட்டியம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இதனிடையே பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இ பாஸ்
இதனை அடுதுது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வணிக ரீதியான பயணமாக 3 நாட்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பராமரிப்பு மையம்
பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மையங்களை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பராமரிப்பு மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.