கடையத்தில் இன்று இரவு விபத்து விவசாயி பரிதாப சாவு
1 min read
Farmer’s tragic death in an accident tonight at Kadayam
7.3.2021
கடையத்தில் இன்று இரவு நடந்த விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50) விவசாயியான இவரது தந்தை பெயர் சிவசாமி.
இன்று இரவு பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்களில் கடையம் மெயின் ரோட்டில் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். பஞ்சாயத்து யூனியன் அலுவலம் அருகே வரும்போது எதிரே ஏதோ ஒரு வாகனம் தட்டியதாக கூறுப்படுகிறது.
இதில் அவர் நிலைகுறைந்து கீழே விழுந்தார். அவர் அந்த வழியாக வந்த பஸ்சுக்குள் விழுந்துவிட்டார். இதனால் பஸ்சின் பின்புற சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி தெரியாததால் அந்த பஸ் அங்கே நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் கிடைத்தும் கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.