June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 23,285 people in a single day in India

12.3.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 23,285 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

உலக நாடுகளில் கொரோனா பரவல் இந்தியா 2வது இடம் வரை சென்றது. ஆனால் அதன்பின் வெகுவாக குறைந்து வந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது.

இந்தியாவில் கொரேனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று( வியாழக்கிழமை) புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 117 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,306 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,157 பேர் கொரேனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு 1,97,237 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாடுமுழுவதும் இதுவரை 2,61,64,920 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.