பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
1 min read
BJP Senior leader Yashwant Sinha has joined the Trinamool Congress
13/3/2021
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா
Facebook Twitter Mail Text Size Printபா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கொல்கத்தா நகரில் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார். இதன்பின்னர் டி.எம்.சி. பவனுக்கு வருகை தந்த சின்ஹா அக்கட்சியில் இணைந்ததுபற்றி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அடல் ஜி காலத்தில் கருத்தொற்றுமையில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டிருந்தது.
ஆனால், இன்றைய அரசு அழிப்பதிலும், வெற்றி பெறுவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து அகாலிகள், பிஜு ஜனதா தளம் வெளியேறி விட்டது. இன்று பா.ஜ.க.வுடன் யார் நிற்கின்றனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தது பற்றி கூறும்பொழுது, நந்திகிராமில் மம்தா ஜி மீது நடந்த தாக்குதலே அக்கட்சியில் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது. அந்த தருணத்தில், திரிணாமுல் காங்கிரசில் இணைந்து மம்தா ஜிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவானது என்று கூறியுள்ளார்.