June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 695 people in Tamil Nadu today

13.3.2021

தமிழகத்தில் இன்ற 695 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது தொற்று அதிகரித்து வருகிறது. இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 695 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,58,967 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று 257 ஆய்வகங்கள் மூலமாக 65,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 414 பேர் ஆண்கள். 281 பேர் பெண்கள்-. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,18,944 . பெண்களின் எண்ணிக்கை 3,39,988 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35.
தமிழகத்தில் இன்று மட்டும் 512 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 543 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் . இதில் செங்கல்பட்டில் 2 பேரும் சென்னை, நீலகிரியில் தலா ஒருவரும் அடங்குவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,543 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,662 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் நெல்லையில் இன்று 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.