June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா; நெல்லையில் 144 பேர் பாதிப்பு

1 min read

Corona for 6,618 people in Tamil Nadu today; 144 people were affected in Nellai

11.4.2021

தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒரே நாளில் 22பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். நெல்லையில் இன்று 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6,618 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 261 ஆய்வகங்கள் மூலம், இன்று மட்டும் 88,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,992 பேர் ஆண்கள், 2,626 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,63,478 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,69,920 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மட்டும் 2,314 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில் 12 பேர், தஞ்சையில் 2 பேர், செங்கல்பட்டு, தென்காசி, மதுரை, சிவகங்கை, வேலூர், விருதுநகர், சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,908 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அளவில்

இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்தது.
ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. 11.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 839 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவரை இந்தியால் மொத்தம் 1,69,275 பேர் உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.