June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை

1 min read

Murder of an inmate in Palayankottai jail

22/4/2021
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒருர் கொலை செய்யப்பட்டார்.

கைதிகள் மோதல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. பழங்காலத்தில் அமைக்கப்பட்ட சிறையில் பல்வேறு குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை அங்கு அடைக்கப்பட்டு இருந்த தைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதில் முத்துமனோ என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் இறந்து போனார்.

விசாரணை

கொலை செய்யப்பட்ட கைதி முத்துமனோ வாகைக்குளத்தைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில்தான் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்தான் கைதிகள் மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றி பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதிகளில் விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.