இலங்கையில் பரவும் சக்திவாய்ந்த கொரோனா; காற்றில் ஒரு மணிநேரம் இருக்குமாம்
1 min read
Powerful corona spreading in Sri Lanka; May be in the air for an hour
25/4/2021
இலங்கையில் அதக சக்திவாய்ந்த புதிய கொரோனா பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் ஒரு மணிநேரம் இருக்கக் கூடியது என்று கூறப்படுகிறது.
கொரோனா
சீனாயில் உருவான கொரோனா உலகம் எங்கும் பரவி நாசமாக்கி வருகிறது. முதலில் உருவான கொரோனாவை உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒடுக்கியது. ஆனால் அந்த கொரோனா பரணாம வளர்ச்சி கண்டதுபோல் தனது உருவத்தை மாற்றி வீரியத்தை கூட்டி பரவி வருகிறது.
தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உருமாறிய கொரோனாவால் அதிதீவிரமாக பரவிவரும் இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில்…
இந்த நிலையில் இலங்கையில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாலவிகே கூறியதாவது:-
ஒரு மணி நேரம்
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளை விட புதிய கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காற்றில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு நீடித்து இருக்கக்கூடியது. இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. இதற்கு அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.