June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 4 லட்சத்தை தாண்டி கொரோனா பதிவு

1 min read

orona registration crossed 4 lakh for the 3rd consecutive day in India

8.5.2021-
இந்தியாவில் 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி கொரோனா பதவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் தற்போது இந்தியாவில்தனர் அதிகமாக பரவுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் 4 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து பதிவாகி உள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் புதிதாக 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வியாழக்கிழமை 4,14,188 ஆகவும், புதன் கிழமை 4,12,262 ஆகவும் இருந்தது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்து உள்ளது.

4,187 பேர் சாவு

கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 3,915 ஆகவும், நேற்று 3,980 ஆகவும் இருந்தது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 37,23,446
பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேற்கண்ட தகவலை இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.