இந்தியாவில் ஒரேநாளில் 3,26,098 பேருக்கு கொரோனா; 3,890 பேர் பலி
1 min read
Corona for 3,26,098 people in one day in India; 3,890 people were killed
16-/5/2021
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,890 பேர் கொரோனாவுக்கு இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் தினமும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வருகிறது. இந்த சூழலில் நேற்று கொரோனா பாதிப்பு 3.43 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவல் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் அதாவது ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907 ஆக உயர்வடைந்து உள்ளது.
3,890 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் நேற்று 3,890 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,66,207 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36,73,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
பரிசோதனை
கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 31 கோடியே 30 லட்சத்து 17 ஆயிரத்து 193 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 16,93,093 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.