July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா; 311 பேர் உயிரிழப்பு

1 min read

Corona for 33,181 people in Tamil Nadu today; 311 casualties

16/5/2021
தமிழகத்தில் இன்று 33,181 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 311 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 66,812 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,008பேர் ஆண்கள், 14,173 பேர் பெண்கள். இன்று 21,317 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்தது.

311 பேர் சாவு

இன்று தமிழகத்தில் 311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

சென்னையில் இன்று அதிகபட்சமாக 6247 பேருக்கும், கோவையில் 3166 பேருக்கும், ஙெ்கல்பட்டில் 2041 பேருக்கும் ஈரோட்டில் 1232 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 1119 பேருக்கும், கன்னியாகுமரி 1030 பேருக்கும், மதுரையில் 1095 பேருக்கும், திருவள்ளூரில் 1835 பேருக்கும், திருச்சியில் 1569 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் 692 பேருக்கும், தென்காசியில் 456 பேருக்கும், தூத்துக்குடியில் 914 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 60 பேரும், செங்கல்பட்டில் 32 பேரும், கோவையில் 15 பேரும், நெல்லையில் 6 பேரும்,தென்காசியில் 4 பேரும், தூத்துக்குடியல் 4 பேரும் கொரோனாவுக்கு இறந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.