மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கொரோனாவுக்கு மரணம்; ஒரே நாளில் 2,63,533 பேருக்கு தொற்று
1 min read
Death of Corona, former president of the Medical Association; Infected 2,63,533 people in a single day
18/5/2021
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சங்க முன்னாள் தலைவரும் கொரோனாவுக்கு மரணம் அடைந்தார்.
இந்தியாவில் கொரோனா
இந்தியா கொரோனா 2-வது அலையால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளிவில் அதிகமாக பரவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்தியாவின் கொரோனா பதவி பற்றி நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியி்ட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவல் நேற்று மட்டும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.
4, 329 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு நேற்று 4 ஆயிரத்து 329 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மெல்ல குறைந்து வரும்போதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதலால் பொதுமக்கள், பல்வேறு துறைகளில் பிரபலமான நபர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
மருத்துவ சங்க முன்னாள் தலைவர்
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரனான டாக்டர் கேகே அகர்வால் (வயது 62) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற கேகே அகர்வாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டுவந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். டாக்டர் கேகே அகர்வாலின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.