தமிழகத்தில் தினசரி கொரோனா பதிவு 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது; 460 பேர் சாவு
1 min read
Daily corona registration in Tamil Nadu is less than 25 thousand; 460 deaths
3/6/2021
தமிழகத்தில் தினசரி கொரோனா பதிவு 25 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. இன்று ஒரே நாளில்460 பேர் இறந்தனர்.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக அதிகமாக இருந்தது. முழு ஊரடங்கு அறிவித்தபின்னர் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 13 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. நேற்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று கண்டிறியப்பட்டது. அது இன்று 24,405 ஆக குறைந்தது.
தமிழக கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று 32,221 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,66,660 ஆக உயர்ந்தது.
460 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 460 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 213 பேர் தனியார் மருத்துவமனையிலும், 247 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,665 ஆக அதிகரித்து உள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில்…
சென்னையில் இன்று 2062 பேருக்கும், கோவையில் 2980 பேருக்கும் ஈரோட்டில் 1671 பேருக்கும், சேலத்தில் 1253 பேருக்கும், தஞ்சாவூரில் 1020 பேருக்கும் திருப்பூரில் 1264 பேருககும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று இறந்தவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 68 பேரும், கோவையில் 48பேரும், செங்கல்பட்டில் 47 பேரும், சேலத்தில் 33 பேரும் இறந்துள்ளனர்.
தென்காசில் 9 பேர் சாவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 289 பேருக்கு கெரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 6 பேர் இறந்தனர். தென்காசியில் இன்று 306 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில் 9 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 3 பேர் இறந்துள்ளனர்.