சசிகலா அதிமுகவில் இல்லை; எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min read
Sasikala is not in the AIADMK; Interview with Edappadi Palanisamy
4/6/2021
சசிகலா அதிமுகவில் இல்லை, அவர் அமமுக தொண்டர்களுடன் தான் பேசி வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றபின் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
9 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோதாவரி-காவிரி இணைப்பு
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக.
கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்.
கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி திட்டம் குறித்து பேசினேன்.
கோதாவரி-காவிரி திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்தேன்.
கொரோனா
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக்கூடாது. பரிசோதனை முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வலியுறுத்துவோம்.
சசிகலா
சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடங்கங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். அமமுக தொண்டர்களுடன் தான் சசிகலா பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு இல்லை. அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.