தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,023 ஆக குறைந்தது; சாவு 409 ஆக அதிகரிப்பு
1 min read
Corona infestation in Tamil Nadu drops to 18,023; Death increase to 409
8.6.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 18,023 ஆக குறைந்தது. ஆனால் சாவு எண்ணிக்கை 409 ஆக உயர்ந்து உள்ளது.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,74,704 ஆக அதிகரித்து உள்ளது..
இன்று கொரோனா உறுதியானவர்களில் 9,992 பேர் ஆண்கள், 8,031 பேர் பெண்கள். இன்று 31,045 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,28,344 ஆக உயர்ந்தது.
நேற்று கொரோனா 19,448 பேருக்கு கொரேனா பாதித்த நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.
409 பேர் சாவு
இன்று கொரோனாவுக்கு 409 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 351 பேர் இறந்த நிலையில் இன்று சாவு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தென்காசியில் 10 பேர் சாவு
சென்னை(1437), கோவை (2439), ஈரோடு (1596) ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பதிவாகி உள்ளது.
நெல்லை 185 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 198 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில் 10 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 281 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 பேர் இறந்துள்ளனர்.