தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா; சாவு 405
1 min read
Corona for 17,321 people in Tamil Nadu today; Death 405
9.5.2021
தமிழகத்தில் இன்று 17,321 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் இறப்பு குறையவில்லை.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 12 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை குறையவில்லை.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாற:-
தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 18023 பேர் பாதித்த நிலையில் இன்று கொரோனா மேலும் குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 1,437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,345 குறைந்துள்ளது.
12 வயதிற்குட்பட்ட 671 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் 19-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவால் மேலும் 405 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,170 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 409 பேர் இறந்த நிலையில் இன்று 405 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 94 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கோவையில் மட்டும் மேலும் 62 பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து மேலும் 31,253 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 20,59,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,04,258 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் 9 பேர் சாவு
சென்னை (1345), கோவை(2319), ஈரோடு (1405) ஆகிய மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நெல்லை 258 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 190 பேர் காதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 297பேர் பாதித்த நிலையில் பேர் இறந்துள்ளனர்.