June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கோவில்களில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12-ந் தேதி ஆலோசனை

1 min read

12th consultation on worshiping in temples

10.6.2021
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வருகிற 12-ந் தேதி அமைச்சர் சேகர்பாபு தலைமையி்ல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆலோசனை

வருகிற 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆணையர் அரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திருக்கோவில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருக்கோவில்களுக்கான அறங்காவலர் நியமனம் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஓதுவார் பணியிடங்கள்

சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருக்கோவில் விவரங்களுடன் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். யானைகள் பாராமரிப்பு, மற்றும் ஓதுவார் பணியிடங்கள் விவரம் திருக்கோவில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.