தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,108 ஆக குறைந்தது; 374 பேர் பலி
1 min read
Corona impact in Tamil Nadu drops to 15,108; 374 killed
12.6.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,108 பேராக கொரோனா குறைந்துள்ளது. இன்று 374 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 22 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 8,342 பேர் ஆண்கள், 6,766 பேர் பெண்கள். இன்று 27,463 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,48,352 ஆக உயர்ந்தது.
374 பேர் சாவு
374 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்து உள்ளது.
நெல்லை
சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பதிவாகி உள்ளது. இன்று 989 பேருக்கும், கோவையில் 1982 பேருக்கும், ஈரோட்டுக்கு 1353 பேருக்கும், சேலத்திற்கு 894 பேருக்கும், திருப்பூரில் 844 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தென்காசியில் 176 பேருக்கு தொற்கு கண்டறியப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 296 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் இறந்துள்ளனர்.