காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 2 போலீசார் உட்பட 4 பேர் பலி
1 min read
Terrorist attack in Kashmir; Four people were killed, including two policemen
12/6/2021
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 போலீசார் உட்பட 4 பேர் பலியானார்கள்.
பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைய அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் அடியோடு நின்றுவிட்டது. அவர்களால் ஏற்பட்டு வந்த நாசவேலை தற்போது இல்லை.
ஆனாலும் ஜம்முகாஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயரங்கரவாதிகளை தேடி ஒடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
துப்பாக்கி சண்டை
இந்த நிலையில் காஷ்மீரில் சோபார் மாவட்டம் அரம்போரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு விரைந்தனர்.
மார்க்கெட் அருகே சென்றபோது அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினார்கள். இதனால் போலீசார் அவர்ளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
4 பேர் பலி
இந்த துப்பாக்கிச் சண்டையில், 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னனியில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளதாக, காஷ்மீர் ஐ.ஜி., விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரம்போரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.