தமிழகத்தி் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்
1 min read
BJP protests against the opening of Tasmac stores in Tamil Nadu
தெரிவித்து பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்
13.6.2021
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகமாக கமலாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
போராட்டம் குறித்து பேசிய எல்.முருகன், “தமிழகத்தில் டீக்கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.