June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பாதிப்பு 14,016 பேராக குறைந்தது; 267பேர் பலி

1 min read
Seithi Saral featured Image

IN Tamil Nadu, the incidence was 14,016; 267 killed

சென்னை, ஜூன்.14-
தமிழகத்தில் இ்ன்று 14,016 பேருக்கு கொரோனாதொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 267 பேர் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 23 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 32 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,53,721 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 7,839 பேர் ஆண்கள், 6,177 பேர் பெண்கள். 25,895 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,74,247 ஆக உயர்ந்தது.

267 பேர் சாவு

இன்று தமிழகத்தில் 267 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

சென்னையி்ல் 935 பேருக்கும், கோவையில் 1895 பேருக்கும், ஈரோட்டில் 1323 பேரும், சேலத்தில் 855 பேரும், திருப்பூரில் 820 பேரும், தஞ்சாவூரில்615 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தென்காசியில் 8 பேர் சாவு

நெல்லை மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 6பேர் இறந்துள்ளனர். தென்காசி 153 பேர் பாதித்த நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில்289 பேர் பாதித்த நிலையில் 5 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.