July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று புதிதாக 11,805 பேருக்கு கொரோனா; 267 பேர் சாவு

1 min read

Corona for 11,805 new people in Tamil Nadu today; 267 deaths

15-6-2021

தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படடு உள்ளது. 267 பேர் இறந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,78,298 ஆக அதிகரித்துள்ளது.

267 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,068 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 23,207 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,23,015 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,25,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 1,563 பேருக்கும், ஈரோட்டில் 1,270 பேருக்கும், சேலத்தில் 759 பேருக்கும், திருப்பூரில் 728 பேருக்கும், தஞ்சாவூரில் 541 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் 115 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடில் 222 பேர் பாதிக்கப்பட்டநிலையில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.