June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,448 பேராக குறைந்தது; 270 பேர் சாவு

1 min read

10,448 person affected for corona and death 270 today in Tamil Nadu

16/6/2021
தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 270 பேர் இன்று இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 26நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 35 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இன்று 10,448பேருக்கு கோவிட் உறுதியானது. (நேற்று11,805 பேர் பாதிப்பு). இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,88,746 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 5,849 பேர் ஆண்கள், 4,599 பேர் பெண்கள். இன்று 21,058 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,44,073 ஆக உயர்ந்துள்ளது.

270 பேர் சாவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 270 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.(நேற்று 267 பேர் இறந்தனர்.) இதனால் இதுவரை ,கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,338 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை இன்று 689 பேருக்கும், கோவையில் 1420 பேருக்கும்,ஈரோட்டில் 1123 பேருக்கும், சேலத்தில் 693 பேருக்கும், தஞ்சாவூரில் 405 பேருக்கும், திருப்பூரில் 608 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 108 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் 2 பேருக்கும், தென்காசியில் 98 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 167 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.