தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் பதவியேற்பு
1 min read
AKS Vijayan takes over as Special Representative of the Government of Tamil Nadu in Delhi
16.6.2021
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் இன்று வைகை இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லி பிரதிநிதி
தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளராக இருப்பவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சித்தமல்லியைச் சேர்ந்தவர். இவர் 1999, 2004, 2009 மக்களவைத் தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
இந்த நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 14-ந் தேதி நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் ஓராண்டாகும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார்.
பதவி ஏற்பு
இந்த நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன், வைகை இல்லத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லி வைகை இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.