June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் சாவு

1 min read

Corona for 8,183 people in Tamil Nadu today; 180 deaths

19.6.2021
தமிழகத்தில் இன்று 8,183 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 180 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா குறைந்தது

தமிழகத்தில் கடந்த 29 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 38 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 8,183 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 4,620 பேர் ஆண்கள், 3,563 பேர் பெண்கள்.

இன்று மட்டும் 18,232 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,04,885 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 180 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில்

சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 468ஆக குறைந்தது. அந்த மாவட்டத்தில் 31 பேர் இறந்துள்ளனர். இன்று அதிகபடியாக கோவையில் 1014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று 17 பேர் இறந்துள்ளனர். ஈரோட்டில் 933 பேரும், சேலத்தில் 533 பேரும், திருப்பூரில் 489 பேரும் கொரோனாவுக்கு இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு நிலையில் இன்று 4பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 71 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 131 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.