தமிழகத்தில் 2,913 பேராக கொரோனா குறைந்தது; 49 பேர் சாவு
1 min read
Corona reduced to 2,913 in Tamil Nadu; 49 deaths
10.7.2021
தமிழகத்தில் இன்று 2,913 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 49 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,321 பேர் குணமடைந்து உள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 59 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,913 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,16,011 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,672 பேர் ஆண்கள், 1,241 பேர் பெண்கள். இன்று 3,321 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,49,873 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 49 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை
கோவையில் 338 பேருக்கும், ஈரோட்டில் 215 பேருக்கும், சேலத்தில் 180 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், தஞ்சையில் 174 பேருக்கும், திருப்பூரில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும், திருச்சியில் 116 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 17 பேருக்கும், தூத்துக்குடியில் 52 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று இறப்பு இல்லை.